Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியா தான் முன்னோடி.. விசா நிறுவன துணை தலைவர்..!

Mahendran
திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (10:23 IST)
இந்தியா தான் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் முன்னோடி என விசா நிறுவனத்தின் துணைத் தலைவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தொலைநோக்கு திட்டங்களில் ஒன்றான டிஜிட்டல் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் பரவி வருகிறது என்பதும் பேரு நகரங்கள் முதல் கடைக்கோடி கிராமங்கள் வரை தற்போது டிஜிட்டலில் பண பரிவர்த்தனை முறை நடைபெற்று வருவது என்பது தெரிந்தது.

பெட்டிக்கடை முதல் தள்ளு வண்டியில் விற்பனை செய்யும் வியாபாரிகள் கூட டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்து வருவதை பார்த்து உலக நாடுகளை ஆச்சரியத்தில் உள்ளன. இந்த நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்து விசா நிறுவனத்தின் துணைத்தலைவர் கெல்லி மஹோன் துல்லியர், என்பவர் கூறிய போது உலக அளவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக இந்தியா தான் இதில் முன்னோடியாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார   நாடாக மாறி உள்ள நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனையில்  அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக உள்ளது என்பதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மையும் உள்ளது.

இந்தியாவில் தற்போது 55 சதவீத பெண்கள் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர் என்றும் அவர்களில் 20 சதவீத பெண்கள் சிறு மற்றும் குறிதொழில் செய்து வருகின்றனர் என்றும் கெல்லி மஹோன் துல்லியர் தெரிவித்தார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments