Publish Date: Wed, 15 Sep 2021 (21:42 IST)
Updated Date: Wed, 15 Sep 2021 (21:44 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது
ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும் என்ற நிலையில் வரும் 17ம் தேதி மீண்டும் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படும் நிலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன
இதனால் சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பக்தர்கள் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் கண்டிப்பாக கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது