ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சோனியாவின் அழைப்பை நிராகரித்த முன்னாள் பிரதமர்

Webdunia
புதன், 31 மே 2017 (05:46 IST)
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வருகிற ஜூலை மாதம் நிறைவடைய உள்ளதை அடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வரும் ஜூலை மாதம் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.



 


இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதா சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் வலுவான பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளது. பாஜகவுக்கு தெலுங்கு தேசம், அதிமுகவின் இரு அணிகளும் ஆதரவு கொடுக்கும் என்பதால் பாஜக நிறுத்தும் வேட்பாளர் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவகெளடாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் நிற்குமாறு சோனியா அழைப்பு விடுத்ததாகவும், இந்த அழைப்பை தேவகெளடா நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் சார்ப்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் இந்த தேர்தலில் பலிகடா ஆக விரும்பவில்லை என்று தேவகெளடா தரப்பில் கூறப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் தான் கர்நாடகத்தில் மாநில கட்சியை பலப்படுத்த பணியாற்றி வருவதாகவும், கர்நாடகத்திலேயே அரசியல் செய்ய விரும்புவதாகவும், அதனால் எனக்கு ஜனாதிபதி பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்றும் அவர் சோனியாவுக்கு பதிலளித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ் அணியின் கூண்டோடு காலி.. தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர்...!

தேர்தலில் தனித்து நின்றால் த.வெ.க எத்தனை % வாக்குகளைப் பெறும்? எலான் மஸ்க்கின் Grok கணிப்பு..!

விஜய் முன் தவெக நிர்வாகி கூறிய குட்டி ஸ்டோரி.. என்ன ஒரு அர்த்தமுள்ள விஷயம்..!

ஓட்டல் முன் அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தை.. கடை திறக்க வந்தவருக்கு அதிர்ச்சி..!

இந்து இளைஞர் உயிருடன் தீ வைத்து கொலையா? தேர்தலுக்கு முன் மதக்கலவரம் ஏற்படுத்த சதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments