Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் முதல் முறை கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா திரிபு

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (00:24 IST)
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவக் காரணாக இருந்த டெல்டா திரிபு, இலங்கையில் முதல் முறை கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் உயிரியல் பிரிவின் பிரதானி சிறப்பு மருத்துவர் டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
 
ட்விட்டர் தளத்தில் பதிவொன்றின் ஊடாக சந்திம ஜீவந்தர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த இருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருந்தது ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது.
 
ஆனால், அந்த வைரஸ் இலங்கை சமூகத்திற்குள் இருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. இப்போது முதல் தடவையாக சமூகத்திற்குள் இந்த திரிபு கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு - தெமட்டகொட பகுதியிலுள்ள ஐவரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் டெல்டா திரிபு சமூகத்தில் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
 
இலங்கையில் தற்போது பரவிவரும் கோவிட் வைரஸை விடவும், இது 50 சதவீதம் வீரியம் கொண்டது என சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.
 
இலங்கையில் தற்போது செலுத்தப்படும் கோவிட் தடுப்பூசியின் முதல் டோசை மாத்திரம் எடுத்துக்கொண்டவர்களுக்கு, இந்த வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments