Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி: மத்திய பாஜக அரசை கடுமையான விமர்சித்த ராகுல்காந்தி

Webdunia
சனி, 24 டிசம்பர் 2022 (21:13 IST)
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி  தன் கட்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டி, இந்தியா முழுவதும் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையை நடத்தி வருகிறார்.

கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாக்குமரியில் தனது யாத்திரையை தொடங்கிய அவர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் என பல மாநிலங்களை தாண்டி  100 வது நாளான இன்று இந்த யாத்திரை டெல்லியில் நடந்து வருகிறது.

இந்த யாத்திரையில் நடிகரும் ம. நீ, மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் காந்தியுடன் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் தலை நகர் டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, அங்கு அமைக்கப்பட்ட மேடையில் பேசியதாவது: நாட்டின் அனைத்து இடங்களிலும் மதவெறுப்புணர்ச்சி  உள்ளது. இந்த யாத்திரையை நாங்கள் தொடங்கியபோது, அந்த வெறுப்புணர்ச்சியை போக்க நினைத்தேன். அவர்கள் வெறுப்பை பரப்புகையில் நாங்கள் அன்பை விதைத்து வருகிறோம். அவர்கள் வன்முறையை பரப்புகையில் நாங்கள் அஹிம்சையை பரப்புகிறோம் என்று தெரிவித்தார்.

ALSO READ: ராகுல் காந்தி பயணத்தை நிறுத்த கொரோனா பரப்பப்படுகிறதா? முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு
 
மேலும், இது பிரதமர் மோடியின் அரசாங்கம் அல்ல, தொழிலதிபர்களான அதானி மற்றும் அம்பானியின் அரசாங்கம் ; நாட்டில் படித்துள்ள இளைஞருக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments