Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா : டெல்லி, மஹாராஷ்டிராவில் பலி எண்ணிக்கை உயர்வு !

கொரோனா : டெல்லி, மஹாராஷ்டிராவில்  பலி எண்ணிக்கை உயர்வு !
, புதன், 15 ஏப்ரல் 2020 (22:34 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில்,வரும் வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில், கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 1578ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் புதிதாக இன்று 232 பேருக்கு கொரோனா பாதிபக்கப்பட்டுள்ளனர். இதுவரை  அம்மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 2,916 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உத்தரப் பிரதேச மாநில போலீஸார் ரூ.20 கோடி நிதி உதவி !