Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் இருந்து தேர்தல் பிரச்சாரம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த மனு தள்ளுபடி..!

Siva
வியாழன், 2 மே 2024 (11:45 IST)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் அவர் சிறையில் இருந்தவாறு காணொளி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது திகார் சிறையில் இருக்கும் நிலையில் வழக்கறிஞர் அமர்ஜித் குப்தா என்பவர் ’சிறையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் காணொளி வாயிலாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் உயர்நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது .தேர்தல் நடத்தை விதிமுறைக்கு இந்த மனு பொருந்தாது  சிறையில் இருக்கும் அரசியல் தலைவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதிப்பது சட்டத்துக்கு முரணானது என்றும் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments