Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுபானம் டோர் டெலிவரிக்கு அனுமதி! – அரசு அறிவிப்பால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!

மதுபானம் டோர் டெலிவரிக்கு அனுமதி! – அரசு அறிவிப்பால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!
, செவ்வாய், 1 ஜூன் 2021 (10:17 IST)
கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுபானங்களை டோர்டெலிவரி செய்ய டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுபானக்கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் மது கிடைக்காமல் மதுப்பிரியர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து மதுபானங்களை வாங்கி கொள்ள டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது. ஆன்லைன் செயலிகள், தளங்கள் மூலமாக உள்நாட்டு, வெளிநாட்டு பானங்களை ஆர்டர் செய்து டோர்டெலிவரியில் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆக்ஸிஜன் அளவு 94க்கு கீழ் இருந்தால் அனுமதி கிடையாது! – புதிய நெறிமுறைகள் வெளியீடு!