Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிர்பயா பலாத்கார வழக்கு குற்றவாளி சிறையிலேயே தற்கொலை முயற்சி

நிர்பயா பலாத்கார வழக்கு குற்றவாளி சிறையிலேயே தற்கொலை முயற்சி
, வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (10:39 IST)
மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா சிறையிலேயே தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 
கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இரவு நிர்பயா என்ற புனைபெயரில் அழைக்கப்பட்ட, மருத்துவ மாணவி நிர்பயா தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது டெல்லியில் ஓடும் பேருந்தில் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார்.
 
மேலும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், கொடூரமாகத் தாக்கப்பட்டு சாலையோரம் வீசப்பட்டார். அவருடன் சென்ற அவரது நண்பரும் தாக்கப்பட்டு உதவிக்காக மன்றாடி 45 நிமிடங்களுக்கு பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 
தீவிர சிகிச்சை மேற்கொண்ட அப்பெண் 10 நாட்கள் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்தார். பின்னர், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அப்பெண் 3 நாட்களில் பரிதாபமாக பலியானார்.
 
இந்த வழக்கில் காவல் துறையால் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் கடந்த மார்ச் மாதம் திகார் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டார்.
 
மற்றொருவருக்கு 17 வயது என்பதால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள முகேஷ், வினய் ஷர்மா, பவன் மற்றும் அக்ஷய் தாகுர் ஆகிய நால்வருக்கும் விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
 
இந்நிலையில் குற்றவாளி வினய் சர்மா தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளான். திகார் சிறையில் சர்மா மாத்திரைகளை எடுத்துக் கொண்டதோடு, தான் வைத்திருந்த துணியால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளான் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்த்