Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2024ல் பிரதமர் மோடிக்கு மக்களே லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள்: டெல்லி துணை முதல்வர்

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (14:03 IST)
2024 ஆம் ஆண்டில் மக்களே பிரதமர் மோடிக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு மற்றும் அலுவலகங்களில் தற்போது சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது என்பதும் இந்த சோதனையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட 13 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
டெல்லியில் மதுபானங்கள் விற்பனை செய்யும் உரிமை வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்த வழக்கில் தான் இந்த சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் சோதனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் மணிஷ் சிசோடியா 2024 ஆம் ஆண்டு பொதுமக்கள் மோடி உள்பட பாஜகவினருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்புவார்கள் என தெரிவித்துள்ளார்
 
 விலைவாசி ஏற்றம் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு  தீர்வுகாணும் நல்ல தலைவரை நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments