Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமலாக்கத்துறையில் சரணடைய சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..

அமலாக்கத்துறையில் சரணடைய சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..
, வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (18:20 IST)
அமலாக்கத்துறையினரிடம் சரணடைய சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே அமலாக்கத்துறையினரிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று நீதிபதி அஜய்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரம் தரப்பில் ஆஜரான வக்கீல் கபில் சிபில், குறிப்பிட்ட காலத்தில் ப சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை முயற்சி செய்தது. ஆனால் தற்போது அவரை சிறை வாசத்தில் நீட்டிக்க விரும்புகிறது. இது அவருக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்தும். இதனால் அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என வாதிட்டதாக கூறப்படுகிறது.

இதன் பின்பு, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் துஷார் மேத்தா, ப சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க விரும்பவில்லை. தேவைப்படும்போது அமலாக்கத்துறை காவலுக்கு விண்ணப்பிப்போம் என தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பிறகு சிதம்பரத்தின் மனு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கு முன்பு ஐ என் எக்ஸ் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப சிதம்பரம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீவிரவாதிகள் அச்சுறுத்தல்... இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்துக்கு பாதுகாப்பு