Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிஷ் சிசோடியாவுக்கு நாட்கள் விசாரணை காவள்: நீதிமன்றம் அனுமதி..!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (17:34 IST)
டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா நேற்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அவரை விசாரணைக்கு அழைத்து இருந்த சிபிஐ அதிகாரிகள் 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்தனர் என்பதும் மணிஷ் சிசோடியா கைது குறித்து விளக்கம் அளித்து சிபிஐ செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை காவலில் எடுத்து விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என சிபிஐ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.
 
இந்த  நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி பதிலடி

சென்னையில் திடீரென தீப்பிடித்த ஏசி பஸ்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments