Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் வீட்டுல முடியாட்டி என் வீட்டுலேயே போராட்டம் நடத்துறேன்! –டெல்லியில் காங்கிரஸ் பிரமுகர் தர்ணா!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (09:31 IST)
டெல்லியில் கரும்பூஞ்சை தொற்றுக்கு நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் வீட்டு முன் போராட முயன்ற காங்கிரஸ் பிரமுகர் அனுமதி கிடைக்காததால் தன் வீட்டு முன்னே போராட்டம் நடத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பே இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் கரும்பூஞ்சை தொற்று பூதாகரமான பிரச்சினையாக மாறி வருகிறது. இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்றை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்துள்ளதால் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி டெல்லியை சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான முகேஷ் சர்மா பிரதமர் இல்லத்தின் முன் போராட திட்டமிட்டுள்ளார். ஆனால் பிரதமர் இல்லம் முன்பு போராட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், வீட்டிலிருந்து கிளம்பிய அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் தனது வீட்டு வாசலின் முன்பே தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் முகேஷ் சர்மா. இன்னும் ஒரு வாரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் பிரதமர் வீட்டின் முன்பே போராடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments