Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறையில் இருந்து அமைச்சர்களுடன் உரையாட மனு: அபராதத்துடன் கெஜ்ரிவால் மனு தள்ளுபடி..!

சிறையில் இருந்து அமைச்சர்களுடன் உரையாட மனு: அபராதத்துடன் கெஜ்ரிவால் மனு தள்ளுபடி..!

Mahendran

, புதன், 8 மே 2024 (14:56 IST)
சிறையில் இருந்து கொண்டே அமைச்சர்களுடன் உரையாட அனுமதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரிந்தது. தேர்தல் பிரச்சாரத்திற்காக அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்படும் மனு நீதிமன்றத்தில் விசாரணைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து கொண்டே அமைச்சரபையுடன் காணொளியில் உரையாட அனுமதிக்க வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்தார்/ இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற தள்ளுபடி செய்ததோடு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தார்மீக ரீதியில் தொடரக்கூடாது என்று பாஜக உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறிவரும் நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யும் எண்ணத்தில் இல்லை என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை வானிலை மையம் தகவல்..!!