Publish Date: Tue, 22 Jun 2021 (15:57 IST)
Updated Date: Tue, 22 Jun 2021 (16:04 IST)
இந்தியாவில் வேகமாக கொரொனா இரண்டாம் அலை பரவிவருகிறது. அனைத்து மாநிலங்களிலும் இத்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக் குறைந்து வருகிறது.
தினசரி கொரொனா பாதிப்பு 31 வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் மேலும் 7,427 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருவோரின் எண்ணிக்கை 61 ஆயிரமாக குறைந்துள்ளது. மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, தமிழகத்தில் 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரொனா ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.