Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடந்த 24 மணி நேரத்தில் 4,100 பேர்.. அதிர்ச்சி அளிக்கும் கொரோனா மரணங்கள்!

கடந்த 24 மணி நேரத்தில் 4,100 பேர்.. அதிர்ச்சி அளிக்கும் கொரோனா மரணங்கள்!
, சனி, 26 மார்ச் 2022 (09:50 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து முடிவை எட்டி வருகிறது.

 
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக புதிதாக 1,660 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,18,032 ஆக உயர்ந்தது.
 
மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,100 பேர் இறந்துள்ளனர்.  இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,20,855 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,349 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,80,436 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 16,741 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 1,82,87,68,476 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 29,07,479 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புர்ஜ் கலீஃபா கோபுரத்தில் தமிழின் பெருமை - ஸ்டாலின் பார்வையிட்டார்!