Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகள் முன்பு மறுமகனை வெட்டிக் கொன்ற மாமனார் : திடுக் சம்பவம்

Webdunia
சனி, 13 ஜூலை 2019 (16:28 IST)
குஜராத் மாநிலம் தண்டல் தாலுகா அருகில் இருக்கும் வர்மோர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஊர்மிளா என்பவர், கட்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஸ் சோலங்கி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து வீட்டாரிடம் கூறியபோது இரு குடும்பத்தாரும் வேறுவேறு சமூகத்தவர்கள் என்பதால் இருவரின் வீட்டாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 
இதனைத்தொடர்ந்து ஊர்மிளாவும், ஹரிசும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர் . 
 
பின்னர் திருமணம் முடிந்து 8 மாதங்கள் தனியே வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஊர்மிளா கர்ப்பம் அடைந்துள்ளார். அதனால் அவரைப் பார்க்க அவரது பெற்றோர் வருவதாகக் கூறியிருந்தனர். ஆனால் நீங்கள் இருவரும் இங்கே வந்தால் சமாதானப் பேச்சு நடத்தலாம் என்பது போல் பேசி, ஊர்மிளா மற்றும்  ஹரிஸை ஊருக்கு வஞ்சகமாக வரவழைத்துள்ளனர்.
 
அவர்கள் ஊர்மிளாவில் வீட்டுக்குச் சென்றபோது, ஹரிஸ் சோலங்கியை, ஊர்மிளாவின் குடும்பத்தினர் வெட்டிப் படுகொலை செய்தனர்.
 
இந்தக் கொலை ஊர்மிளாவின் கண்முன்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஊர்மிளாவைக் காணவில்லை. இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிந்து இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments