Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திட்டமிடாமல் அணைகளை திறந்ததே கேரள வெள்ளத்திற்கு காரணமா?

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (16:07 IST)
கேரளாவில் தென்மேற்கு பருவமழை எதிர்பாராத அளவு கொட்டித்தீர்த்தால், அங்கு அணைகள் நிரம்பி வேறு வழியின்றி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், கேரளாவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாய் மாறியது. 
 
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வடிய துவங்கியுள்ளதால், மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தங்களது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப காலமும், பொருளும் நிறைய தேவைப்படும். 
 
கேரள மாநிலத்திற்கு உதவி செய்ய பலர் முன்வந்துள்ளனர். நடிகர்கள், அரசியல் தலைவர், பொதுமக்கள் ஆகியோர் தங்களது பங்கிற்கு நிவாரண நிதிகளை வழங்கினர். 
 
இந்நிலையில், கேரள வெள்ளத்திற்கான காரணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பேசியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, மொத்த கேரளமும் மீட்பு பணியில் இணைந்து நிற்கிறது. அதே நேரம், அரசு தரப்பு செய்ய தவறியவையும் இருக்கிறது. 
 
பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்துக்கு பருவமழை மட்டும் காரணமல்ல. திட்டமிடாமல் அணைகளை திறந்ததும் காரணம். தவறான நேரத்தில், முன்னேற்பாடுகள் இல்லாமல் அணைகள் திறக்கப்பட்டன.
 
மழைப் பொழிவை கணக்கிட்டு, நிலைமையை ஆராய்ந்து, வேறு சாத்தியக்கூறுகளை ஆலோசித்து பின்னர் அரசு நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments