Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினமும் ஒரு கோடீஸ்வரர்.. கேரளா லாட்டரி நிறுவனம் அதிரடி முடிவு..!

Lottery

Siva

, வெள்ளி, 15 மார்ச் 2024 (08:57 IST)
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டாலும் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பாக ஓணம் போன்ற திரு நாட்களின் போது பம்பர் பரிசு லாட்டரி டிக்கெட் ஏராளமாக விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 50 லட்சம் முதல் 75 லட்சம் வரை முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுகள் தினந்தோறும் விற்பனை ஆகி வரும் நிலையில் இருந்து தற்போது பரிசு தொகையை ரூபாய் ஒரு கோடியாக உயர்த்த கேரளா லாட்டரி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து டிக்கெட்டுகளின் பரிசு தொகையை ஒரு கோடிக்கு உயர்த்தி அதிகமாக லாட்டரி சீட்டுகளை பிரிண்ட் செய்து விற்பனை செய்ய பரிந்துரை செய்யப்பட்டதாகவும் இந்த பரிந்துரையை கேரளா அரசு ஏற்றுக்கொண்டால் தினமும் ஒரு கோடீஸ்வரர் கேரளாவில் உருவாகிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஒரே ஒரு கோடீஸ்வரரை உருவாக்க கோடிக்கணக்கான பேர்களை நஷ்டம் அடைய செய்து வருகிறது என்றும் தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் லாட்டரி சீட்டை தடை செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்