Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிர புயலாக மாறியது 'பெய்ட்டி: நாளை கரையை கடக்கும் என தகவல்

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (21:46 IST)
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு, மண்டலமாக மாறி இன்று புயலாக உருவாகும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சென்னையில் இருந்து வடகிழக்கு திசையில் 300கி.மீ தொலைவில் உள்ள பெய்ட்டி தீவிரப் புயலாக மாறிவிட்டதாகவும் இந்த புயல் 26 கி.மீ வேகத்தில் நகரும் என்றும், நாளை பிற்பகல் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என்றும் சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் பெய்ட்டி புயல் கரையை கடக்கும்போது 70 முதல் 100கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளதால் நாளை பிற்பகலுக்கு பின் புயல் கடக்கும் பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments