Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புயல் வலுவடைந்து குஜராத் நோக்கி நகரலாம்! – வானிலை ஆய்வு மையம்!

Advertiesment
National
, வெள்ளி, 14 மே 2021 (09:33 IST)
அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைந்து குஜராத் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் தற்போது அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், மேலும் இது புயலாக மாறவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இது புயலாக வலுபெறும் நிலையில் குஜராத் நோக்கி நகர வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா நிவாரணமாக 30 பொருட்கள்… தமிழக அரசு முடிவு!