Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 400% அதிகரிப்பு! – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (11:46 IST)
கடந்த ஒரு ஆண்டு காலத்தில் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 400% அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

தேசிய குற்ற ஆவணம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலில் கடந்த 2019ம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான சைபர் க்ரைம் வழங்குகளோடு ஒப்பிடுகையில் 2020ம் ஆண்டில் வழக்குகள் 400 சதவீதமாக அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

அதிகமான குற்றங்கள் பதிவான மாநிலங்களில் 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மொத்தம் பதிவு செய்யப்பட்ட 842 வழக்குகளில் 738 வழக்குகள் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான காட்சிகளை காண்பிப்பது, பாலியல் ரீதியாக புகைப்படங்களை சித்தரித்து வெளியிடுவது மற்றும் அது தொடர்பான தகவல்களை பகிர்வது உள்ளிட்ட காரணங்களுக்காக தொடரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்