Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்வெட்டர்னு பில்டப் கொடுத்து கோணிப்பைய கட்டி விட்டு... பாவம்யா அந்த மாடு!!

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (11:11 IST)
மாடுகளுக்கு ஸ்வெட்டர் சாரி கோணிப்பையை போர்த்தி விட்டு அழகு பார்த்துள்ளனர் உத்திரபிரதேச மாநில அரசு தரப்பினர். 
 
குளிர் காலம் வருவதையொட்டி அயோத்தியில் உள்ள மாடுகளுக்கு சணலால் உருவாக்கப்படும் கோட் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் முதல் திட்டமாக பைசாங்பூரில் உள்ள 1,200 பண்ணைகளுக்கு 700 எருமைகளும் உட்பட வருகிற நவம்பர் மாத இறுதிக்குள் தயாராகிவிடும் என அயோத்தி மாநகராட்சி அறிவித்துள்ளது.
 
மேலும் அதன் பிறகு பசுக்களுக்கும், கன்றுக்குட்டிகளுக்கும் தயாரிக்கும் பணி நடைபெற்றுவருவதாகவும், இதன் ஒரு கோட் தயாரிக்க ரூ.250 முதல் 300 வரை செலவாகும் என நகர் நிகாம் கமிஷனர் நிராஜ் சுக்லா தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியான நிலையில், கோணிப்பைகளை ஒன்றாக் தைத்து அதனை மாடுகளின் மேன் போர்த்திவிட்டுள்ளனர். 
இதன் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ள நிலையில், இது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. உத்திரபிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்து மாடுகள் மீது அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments