Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய தடுப்பூசி சான்றிதழ்களை ஏற்க மறுக்கும் ஐரோப்பிய யூனியன்!

Advertiesment
இந்திய தடுப்பூசி சான்றிதழ்களை ஏற்க மறுக்கும் ஐரோப்பிய யூனியன்!
, வியாழன், 1 ஜூலை 2021 (09:41 IST)
இந்தியாவில் போடப்படும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளின் சான்றிதழ்களை ஐரோப்பிய யூனியன் ஏற்க மறுக்கிறது.

ஐரோப்பிய யூனியனில் மக்கள் பயணம் செய்யும் இ பாஸ் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படி பயணம் செய்யும் மக்கள் கட்டாயம் ஐரோப்பிய யூனியனால் அங்கிகரிக்கப்பட்ட 4 வகையான தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட சான்றிதழை அளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது. இந்திய அரசின் கோவின் இணையதளத்தால் வழங்கப்படும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை வழங்கினால் ஏற்க மறுக்கிறதாம்.

இந்நிலையில் ஐரோப்பிய யூனியனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய தடுப்பூசி சான்றிதழ்களை அனுமதிப்பது சம்மந்தமாக பிரதிநிதிகளுடன் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அப்படி அனுமதிக்காவிட்டால் ஐரோப்பாவில் இருந்து இந்தியா வரும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கட்டாயத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா 10 பேரிடம் பேசினாலும், 10,000 பேரிடம் பேசினாலும் கவலையில்லை - ஈபிஎஸ்!