Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவிட்டர் இந்தியா நிர்வாகியை கைது செய்ய தடை விதித்த நீதிமன்றம்!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (20:55 IST)
டிவிட்டர் இந்தியா நிர்வாகியைக் கைது செய்ய தடை விதித்து கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் காசியாபாத்தில் கடந்த 5-ம் தேதி இஸ்லாமிய மதத்தை சார்ந்த ஒரு முதியவர் 5-க்கும் மேற்பட்டோர் தாக்கினர். மேலும் அவரை ஜெய் ஸ்ரீராம் என சொல்ல சொல்லி தாக்கியதாக வீடியோ டிவிட்டரில் வைரலானது. ஆனால் விசாரணையில் அவர் மத ரீதியாக தாக்கப்படவில்லை என உபி போலீஸாரால் சொல்லப்பட்டது.

இதனால் அந்த வீடியோவை நீக்க டிவிட்டர் இந்தியா நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் அதை நீக்கவில்லை. இந்நிலையில் உத்தரபிரதேச போலிஸார் டிவிட்டர் இந்தியா நிர்வாகிக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதுகுறித்த வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நீதிமன்றம் மனீஷ் மகேஷ்வரியை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் காணொளி மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments