Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி; ராகுல் காந்திக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (11:15 IST)
ரஃபேல் விமான வழக்கில் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

இன்று சபரிமலை வழக்கு, ரஃபேல் வழக்கு, ராகுல் காந்தி வழக்கு என்று முக்கியமான வழக்குகளுக்கு ஒரேநாளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. சபரிமலை வழக்கில் விசாரணையை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில் ரஃபேல் போர் விமான வழக்குக்கு அளிக்கப்பட தீர்ப்புக்கு எதிடான மறுசீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம். ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

அதுபோலவே நீதிமன்றம் பிரதமரை திருடன் என கூறியதாக ராகுல் காந்தி பேசியதற்கு எதிரான வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் “உயர்நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து பேசும்போது ராகுல் காந்தி கவனமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இனி அவர் ஒருபோதும் இதுபோல ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது” என்று எச்சரித்து ராகுல் காந்தியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் முடித்து வைத்தனர்.

ஒரேநாளில் மூன்று முக்கிய பிரச்சினைகள் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments