Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீர்ப்பு வரும்வரை பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம்! – உச்சநீதிமன்றம்!

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (10:58 IST)
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கேரளா அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு வழங்கிய நிலையில், மறு சீராய்வு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட சிறிய அமர்வில் தொடங்கிய விசாரணையில் “பெண்கள் நுழைய சபரிமலையில் மட்டுமல்லாமல் பல்வேறு இந்து, இஸ்லாமிய மத கோவில்களிலும் தடை உள்ளது” என குறிப்பிட்டனர்.

எனினும் இந்த தீர்ப்பை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். 7 பேர் கொண்ட பெரிய அமர்வில் மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments