Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் முற்றிலும் தோற்றுவிட்டது… நீதிமன்றம் கண்டனம்!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (13:35 IST)
மேற்கு வங்கத்தில் கொரோனா கால கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் தேர்தல் ஆணையம் முற்றிலும் தோற்றுவிட்டதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேர்தல் கால பரப்புரைகளால் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதாக கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இது சம்மந்தமாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ‘தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருந்தும் கட்டுபாடுகளை நெறிமுறைப்படுத்துவதில் முற்றிலும் தோற்றுள்ளது. சுற்றறிக்கைகளை வெளியிடுவதைத் தாண்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்தொற்று காலத்தின் போது தேர்தல் ஆணையம் வெறும் பார்வையாளராக மட்டும் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் கட்சியினர் பரப்புரை மற்றும் வாக்களிக்கும் போது  கட்டுப்பாடுகளை கடைபிடிக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை’ எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments