Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நித்யானந்தாவைக் கூட்டிவரச் சொன்னால்… இவரை?- கடுப்பான நீதிபதிகள்!

நித்யானந்தாவைக் கூட்டிவரச் சொன்னால்… இவரை?- கடுப்பான நீதிபதிகள்!
, திங்கள், 3 பிப்ரவரி 2020 (20:02 IST)
நித்யானந்தா

நித்யானந்தாவின் ஜாமீன் தொடர்பான வழக்கு ஒன்றில் அவருக்குப் பதிலாக அவரது சிஷயையை ஆஷர் படுத்திய காவல்துறை மீது போலீஸார் அதிருப்தியில் உள்ளனர்.

நித்யானந்தா மீதான பாலியல் அத்துமீறல் வழக்கில் அவருக்கு 2010 ஆம் ஆண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் பலமுறை விசாரணைக்கு ஆஜராகமல் வாய்தா வாங்கிக்கொண்டே இருந்தார். இந்நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென லெனின் கருப்பன் என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார். இது குறித்து நித்யானந்தாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியது.

அந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்த போது அதிகாரியான காவல் துணை ஆணையர் பி.பால்ராஜ் நித்யானந்தா ஆன்மீக சுற்றுலாவில் இருப்பதால் அவரது சிஷ்யையான குமாரி அர்ச்சனானந்தாவிடம் அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது எனத் தெரிவித்தார். இது சம்மந்தமாக பதிலளித்த அர்ச்சனானந்தா, ’நித்யானந்தா எங்கிருக்கிறார் என எனக்குத் தெரியாது. ஆனால் போலிஸார் வலுக்கட்டாயமாக இந்த நோட்டீஸை என்னிடம் கொடுத்து சென்றனர்’ எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதிகள் ‘இதுதான் நீங்கள் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் முறையா?’ எனக் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து...