Webdunia - Bharat's app for daily news and videos

Install App

270 அடி உயர பாறையிலிருந்து குதித்த காதல் ஜோடியினர்

Webdunia
வியாழன், 31 மே 2018 (11:08 IST)
கேரளாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடியினர், 270 அடி உயர பாறையிலிருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் கெவின்(23) என்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் கேரளாவில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
 
கேரள  மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பாப்பினஞ்சேரியை சேர்ந்த கமல்குமாரும் (24) அதே பகுதியை சேர்ந்த அஸ்வதியும்(20) கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இவ்விவகாரம் இருவீட்டாருக்கும் தெரிய வரவே அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதனால் மனமுடைந்த காதல் ஜோடியினர் தற்கொலை செய்ய திட்டமிட்டு, 270 அடி உயரபாறையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், காதல் ஜோடியினரை மீட்டி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் இருவீட்டாரின் பெற்றோர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments