Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் இருவருக்கு கொரோனா: உறுதிப்படுத்திய மத்திய அரசு!

Advertiesment
இந்தியாவில் இருவருக்கு கொரோனா: உறுதிப்படுத்திய மத்திய அரசு!
, திங்கள், 2 மார்ச் 2020 (14:51 IST)
இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
சீனாவை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே கொரோனாவல் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் சீனாவில் குறைந்து வருவதாக தெரியவருகிறது. 
 
சீனாவில் நேற்று 42 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இது முந்திய அனுதினமும் உயிரிழப்பவர்களின் விகிதத்தை விட குறைவானதாகும். சீனாவில் உயிரிழப்பு விகிதங்கள் குறைந்தாலும் இத்தாலி, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. 
 
உலகளவில் கொரோனா வைரஸால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில், இத்தாலியிலிருந்து டெல்லி வந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து தெலங்கானா வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன வளைவு...நெளிவு... நாகினி டான்ஸ் ஆடிய காவலர்கள் ! வைரலாகும் வீடியோ