Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடையும் விகிதம் 97% ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடையும் விகிதம் 97% ஆக அதிகரிப்பு!
, திங்கள், 1 பிப்ரவரி 2021 (10:59 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,57,610 உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 118 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,54,392 ஆக உயர்ந்துள்ளது. 
 
நேற்று ஒரே நாளில் 11,858 பேர் குணமடைந்துள்ளனர்.  எனவே, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,04,34,983 ஆக உயர்ந்துள்ளது. குணமடையும் விகிதம் 97 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்ஜெட் தாக்கலில் இதெல்லாம் அவசியம் இருக்கணும்! – ராகுல் காந்தி எதிர்பார்ப்பு!