Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உருமாறிய கொரோனா... இந்தியாவில் 58 பேருக்கு தொற்று!!

உருமாறிய கொரோனா... இந்தியாவில் 58 பேருக்கு தொற்று!!
, செவ்வாய், 5 ஜனவரி 2021 (11:21 IST)
இந்தியா வந்தவர்களில் இதுவரை 58 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

 
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக மோசமாக பரவி லட்சக்கணக்கானவர்களை பலியாக்கி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டிலிருந்து பரவிவருகிறது. 
 
இதனை அடுத்து பல நாடுகள் இங்கிலாந்து நாட்டிலிருந்து வரும் விமானத்தை தடை செய்துள்ளன என்பதும் இங்கிலாந்து நாடும் தன்னுடைய நாட்டில் பரவி வரும் புதிய உருமாரிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களில் இதுவரை 58 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்தவமனைகளில் தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்தியாவில் 6 சோதனை மையங்களில் எடுக்கப்பட்ட சோதனை முடிவுகளில் தற்போது இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய நாடாளுமன்றம் கட்ட அனுமதி.. ஆனா..? – ரூல்ஸ் போட்ட உச்சநீதிமன்றம்!