Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3.66 லட்சத்தை தாண்டிய பாதிப்புகள்! – மாநிலவாரி நிலவரம்!

3.66 லட்சத்தை தாண்டிய பாதிப்புகள்! – மாநிலவாரி நிலவரம்!
, வியாழன், 18 ஜூன் 2020 (09:58 IST)
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஒரேநாளில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,66.946 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 12,237 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 194,325 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,16,752 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,651 பேர் பலியான நிலையில் 59,166 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 50,193 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 25,093 பேரும், டெல்லியில் 47,102 பேரும், ராஜஸ்தானில் 13,542 பேரும், மத்திய பிரதேசத்தில் 11,244 பேரும், உத்தர பிரதேசத்தில் 14,598 பேரும் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாகன ஓட்டிகளுக்கு ஹார்ட் அட்டாக் வர வைக்கும் பெட்ரோல் விலை!