Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 ஆயிரத்தை தாண்டிய பலிகள்! – ஒரே நாளில் 9 ஆயிரம் பாதிப்புகள்!

6 ஆயிரத்தை தாண்டிய பலிகள்! – ஒரே நாளில் 9 ஆயிரம் பாதிப்புகள்!
, வியாழன், 4 ஜூன் 2020 (09:21 IST)
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நான்காம் கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் பல மாநிலங்களில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,16,919 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 6,075 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,107 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 74,860 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,587 பேர் பலியான நிலையில் 32,329 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 25,872 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 18,100 பேரும், டெல்லியில் 23,645 பேரும், ராஜஸ்தானில் 9,652 பேரும், மத்திய பிரதேசத்தில் 8,588 பேரும், உத்தர பிரதேசத்தில் 8,729 பேரும் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக அளவில் 65.66 லட்சமாக எகிறிய கொரோனா பாதிப்பு