Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் – 3 ஆயிரத்திற்கும் மேல் பலி: இந்திய நிலவரம்

1 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் – 3 ஆயிரத்திற்கும் மேல் பலி: இந்திய நிலவரம்
, புதன், 20 மே 2020 (09:04 IST)
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்ட ஊரடங்கும் முடிவடைந்து நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 3,303 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 42,298 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 37,136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,325 பேர் பலியான நிலையில் 9,639 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 12,448 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 12,140 பேரும், டெல்லியில் 10,554 பேரும், ராஜஸ்தானில் 5,845 பேரும், மத்திய பிரதேசத்தில் 5,465 பேரும், உத்தர பிரதேசத்தில் 4,926 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொல்கத்தாவை நெருங்கிவிட்ட அம்பன் புயல்: 106 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று