Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

52 ஆயிரத்தை தாண்டிய பாதிப்புகள்; 2 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!

52 ஆயிரத்தை தாண்டிய பாதிப்புகள்; 2 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!
, வியாழன், 7 மே 2020 (09:04 IST)
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது கட்டமாக மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52,952 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,783 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 15,267 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 16,758 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 6,625 பேரும், டெல்லியில் 5532 பேரும், ராஜஸ்தானில் 3317 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,138 பேரும், தமிழகத்தில் 4,829 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகள் ஆபாச படத்தை வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்த வாலிபர் கைது!