Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

30 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு! – ஆயிரத்தை தாண்டிய பலி!

30 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு! – ஆயிரத்தை தாண்டிய பலி!
, புதன், 29 ஏப்ரல் 2020 (08:52 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளபோதும் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29,974 லிருந்து 31,332 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 987 லிருந்து 1,007 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 7027 லிருந்து 7,696 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 9,318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 3,774 பேரும், டெல்லியில் 3,314 பேரும், ராஜஸ்தானில் 2,364 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,314 பேரும், தமிழகத்தில் 2,058 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூஜ்ஜியமான ஈரோடு, சதமடித்த சென்னை: என்ன காரணம்?