Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

89 ஆயிரத்தை தாண்டியது தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!

89 ஆயிரத்தை தாண்டியது தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!
, சனி, 3 ஏப்ரல் 2021 (10:01 IST)
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. 
 
அந்த வகையில், புதிதாக 89,129 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,23,92,260 ஆக உயர்ந்தது. மேலும், புதிதாக 714 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,64,110 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில்  44,202 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,15,69,241 ஆக உயர்ந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது தாக்குதல் - போலீஸ் அதிகாரி பலி