Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயரும் டிஸ்சார்ஜ்; குறையும் மரணம்: முன்னேற்ற பாதையில் இந்தியா!

உயரும் டிஸ்சார்ஜ்; குறையும் மரணம்: முன்னேற்ற பாதையில் இந்தியா!
, புதன், 20 ஜனவரி 2021 (10:24 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. 
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,823 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,05,95,660 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 162 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,52,718 ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும், தொற்றில் இருந்து ஒரே நாளில் 16,988 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1,02,45,741 ஆக உயர்ந்துள்ளது. அதோடு, குணமடைந்தோர் விகிதம் 96.66% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.44% ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் பூடானுக்கு 1.5 லட்சம் கரோனா தடுப்பூசி ஏற்றுமதி!