Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டில் கொரோனா பாதிப்பு மோசத்தில் இருந்து படு மோசம் !

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (11:21 IST)
மத்திய அரசு நாட்டில் கொரோனா பாதிப்பு மோசத்தில் இருந்து படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக எச்சரித்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 53,480 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,21,49,335 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 354 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,61,843 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,14,34,301 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 5,52,566 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்நிலையில் மத்திய அரசு நாட்டில் கொரோனா பாதிப்பு மோசத்தில் இருந்து படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக எச்சரித்துள்ளது. இதனால் மொத்த நாடுமே பெரும் அபாயத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் இந்தச் சூழலில் மெத்தனம் என்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 மணி நேரம் சோதனையான நேரம்..!

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments