Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6.51 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி !

6.51 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி !
, வியாழன், 1 ஏப்ரல் 2021 (10:29 IST)
இந்தியாவில் இதுவரை 6.51 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 72,330 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,22,21,665 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 459 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,62,927 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,14,74,683 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 5,84,055 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இதனிடையே, இந்தியாவில் இதுவரை 6.51 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 20.63 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 30.31 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் 72 ஆயிரத்தை கடத்த தினசரி பாதிப்பு! – வீரியமடையும் கொரோனா நிலவரம்!