Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 2,112 பேர் பாதிப்பு; 04 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா!

ஒரே நாளில் 2,112 பேர் பாதிப்பு; 04 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா!
, சனி, 22 அக்டோபர் 2022 (10:38 IST)
கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த தினசரி பாதிப்புகள் தொடர்ந்து 3 ஆயிரத்திற்குள் இருந்து வருகிறது.


இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,112 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,40,748 ஆக குறைந்தது. புதிதாக 04 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,957 ஆக உயர்ந்தது.

குணமடைந்தோர் எண்ணிக்கை 4,40,87,748 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 24,043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் 2,19,41,43,525 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 3,76,787 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

 Edited By: Sugapriya Prakash

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிளேட்லெட்டுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் ஏற்றி நோயாளி மரணம்?