Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 5,383 பேர் பாதிப்பு; 20 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

ஒரே நாளில் 5,383 பேர் பாதிப்பு; 20 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
, வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (09:34 IST)
கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 5,383 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,45,58,425 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,449 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,39,84,695 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 45,281 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீண்ட சரிவுக்கு பின் திடீரென உயர்ந்த தங்கம் விலை: சென்னையில் இன்றைய நிலவரம்!