Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுபான விற்பனைக்கு கொரோனா வரி… புதுவை முதல்வர்

மதுபான விற்பனைக்கு கொரோனா வரி…  புதுவை முதல்வர்
, வெள்ளி, 8 மே 2020 (17:10 IST)
புதுச்சேரியில் மதுபானக்கடைகள் இன்னமும் திறக்கப்படாத நிலையில் புதுச்சேரி மதுப்பிரியர்கள் தமிழகத்திற்கு மது வாங்க நுழைவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் மதுபானக்கடைகள் இன்னமும் திறக்கப்படாத நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதனால் புதுச்சேரி மதுப்பிரியர்கள் மது வாங்குவதற்காக தமிழகத்தில் நுழைய தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பலர் தமிழகத்தில் உள்ள தங்கள் உறவினர் மூலமாக மதுவை வாங்கி புதுச்சேரிக்கு கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

வழக்கமாக புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை தமிழகத்திற்கு ரகசியமாக கொண்டு வரும் நிலைமை மாறி தற்போது புதுச்சேரி மதுப்பிரியர்கள் தமிழகத்திற்குள் வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகிவரும் நிலையி, புதுச்சேரி மதுமான விற்பனைக்கு கொரோனா வரி விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், நாளை அம்மாநில அமைச்சரவை கூடுகிறது…அப்போது இதுகுறித்த அறிவிப்புகள் என தகவல்கள் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களை தவிர அனைவரும் பாஸ்: அரசு அறிவிப்பு