Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 16,561 பேர் பாதிப்பு; 49 பேர் பலி! – 24 மணி நேர கொரோனா நிலவரம்!

ஒரே நாளில் 16,561 பேர் பாதிப்பு; 49 பேர் பலி! – 24 மணி நேர கொரோனா நிலவரம்!
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (10:07 IST)
கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தினசரி கொரோனா பாதிப்புகள் தற்போது 20 ஆயிரத்திற்குள் குறைந்துள்ளது.


கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,561 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,42,23,557ஆக உயர்ந்தது. புதிதாக 49 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,928ஆக உயர்ந்தது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 18,053 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,35,73,094 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,23,535 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் 2,07,47,19,034 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 17,72,441 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!