Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரானா தொற்றால் தற்கொலை செய்து கொண்ட நபர் !

Advertiesment
india
, திங்கள், 27 ஏப்ரல் 2020 (17:10 IST)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,396 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 381 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை  48 பேர் உயிரிழந்துள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிறுநீரக பிரச்சனை உள்ள ஒரு 50 வயது நபர், சுவாசக் கோளாறு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று விக்டோரியா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரொனா தொற்று இருப்பதை உறுதி செய்து, அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் 5 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

500 கிலோ அரிசி வீணாகக் கீழே கொட்டப்பட்டதால்....மக்கள் அதிர்ச்சி