Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு பலன் கொடுக்குமா? இன்றைய கேரள கொரோனா நிலவரம்!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (08:58 IST)
கேரளாவில் இன்று ஒரே நாளில் 29,836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆம், கேரளாவில் இன்று ஒரே நாளில் 29,836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 75 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,541 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் தொற்று பாதிப்பு இருந்து இதுவரை 37,73,754 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 2,12,566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
வார இறுதி நாட்களில் மட்டும் ஊரடங்கு அறிவித்திருந்த கேரளாவில் இன்று முதல் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய சாலைகள், கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments