Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 லட்சத்தை தாண்டிய மொத்த பலி எண்ணிக்கை – இந்தியாவில் கொரோனா!

4 லட்சத்தை தாண்டிய மொத்த பலி எண்ணிக்கை – இந்தியாவில் கொரோனா!
, வெள்ளி, 2 ஜூலை 2021 (09:34 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் இதுவரையிலான மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 46,617 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,04,58,251 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 853 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,00,312 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,95,48,302 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 5,09,637 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபத்தில் 50 லட்சம் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் !!