Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!

40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
, திங்கள், 6 செப்டம்பர் 2021 (09:42 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 38,948 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,30,27,621 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 219 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,40,752 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,21,81,995 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 4,04,874 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உபி தேர்தலில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்!